India
“இறந்தவர்களுக்கு 30 ஆண்டுகள் கழித்து திருமணம் நடத்தி வைத்த உறவினர்கள்” : ‘பிரேத கல்யாணம்’ பற்றி தெரியுமா?
மணமக்கள் இறந்து 30 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் கடலோர மாவட்டமான மங்களூரு மாவட்டத்தில் ஆடி அமாவசை இரவில் நடைபெறும் பிரேதங்களுக்கான திருமண நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
இந்த திருமணம் ஆடி மாதத்தின் அமாவாசையன்று மட்டுமே நடக்கிறது. இந்த திருமணத்திற்கான காரணம் என்னவென்று பார்த்தால், குடும்பத்தில் திருமண வயதுக்கு முன்பே அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் ஏதாவதொரு காரணமாக உயிரிழந்து விட்டால், அவர்களுக்கு அந்த வயதில் திருமணம் முடியாமல் வாழ்க்கை இறுதியாகி விடுகிறது.
ஒரு வேளை உயிருடன் இருந்திருந்தால் எவ்வாறு திருமணம்நடைபெறுமோ அதுபோன்று நினைத்து நினைவாக திருமணத்தை நடத்திவிடுவதை வழக்கமாக்கியுள்ளனர். கடலோர மாவட்டமான தட்சின கன்னடா மாவட்டத்தில் ஆடி மாத அமாவாசை இரவில் இந்த திருமண நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக நடைபெற்றது.
இது போன்ற திருமண நிகழ்வுகளுக்கு உறவினர்கள் வரவழைக்கப்படு, அதேபோல இந்த திருமணம் நடைபெறும் 2 மாதங்களுக்கு முன்பே திருமண நிச்சயதார்த்த விழாவையும் நடத்தியுள்ளனர். இதுபோல திருமணம் கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகளில் சில பகுதிகளில் இன்றும் வழக்கமாகவுள்ளது.
அன்னி அருண் என்ற யூடியூபர் சிறுவயதில் இறந்த ஷோபாவுக்கும், சாந்தப்பாவுக்கும் நடந்த பிரேத கல்யாணத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ”இன்று நான் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன். இதில் என்ன ஆச்சரியம் என்று நீங்கள் கேட்கலாம். திருமணம் நடக்கும் பெண் இறந்து விட்டார். மாப்பிள்ளையும் இறந்து போனவர்தான். 30 வருடங்களுக்கு முன்பு இறந்து போனவர்களுக்கு இப்போது திருமணம் நடந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!