India
ரயில் நிலையத்தில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை.. ஸ்டேஷன் மாஸ்டர்களால் நடந்த கொடுமை !
கடந்த ஜூலை 25 ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஹரியானா மாநிலம் ரேவாரி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருப்பு அறையில் காத்திருந்துள்ளார். அப்போது அங்கிருந்த கழிவறைக்கு சென்றபோது அது பூட்டப்பட்டிருந்தது.
இதன் காரணமாக ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்திற்கு சென்று கழிவறையின் சாவியை கேட்டுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர்கள் வினய் ஷர்மாவும், ராமவுத்தரும் பெண் பயணிகள் கழிவறையை அசுத்தமாக்குவதால் கழிவறை பூட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
மேலும் அந்த பத்திரிகையாளரிடம் கழிவறை சாவியை கொடுக்க மறுத்த அவர்கள், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பத்திரிகையாளர் அங்கிருந்து சென்றுள்ளார்.
பின் ரேவாரி காவல்நிலையத்துக்கு சென்ற பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலிஸில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிஸார், ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பலரும் ஸ்டேஷன் மாஸ்டர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!