India
'உ.பி எல்லாம் சும்மா.. நாங்க அதைவிட அதிகமா என்கவுண்டர் பண்ணுவோம்’: கர்நாடக பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை
கர்நாடகா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டார். பின்னர் இந்த கொலையில் தொடர்புடைய இரண்டு பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் கர்நாடகா மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக பயன்படுத்துவதை போன்று நாங்களும் பயன்படுத்துவோம் என கூறினார். இவரின் இந்த பேச்சு ஏற்கனவே பதற்றமாக இருக்கும் சூழ்நிலையில் இதை இன்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணணும் இதேபோன்ற கருத்தை பேசியிருப்பது கர்நாடகாவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண்," வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக உத்தர பிரதேச மாதிரிகளை பயன்படுத்தப்போவதாக முதல்வர் கூறியுள்ளார். நாம் ஏன் உத்தர பிரதேசத்தை பின்பற்ற வேண்டும்.
இவர்களை விட ஐந்து மடங்கு சென்று குற்றத்தில் ஈடுபடுபவர்களை என்கவுன்டர் செய்யலாம். இப்போது இதான் இப்படியான சம்பவங்கள் நடக்காது" என தெரிவித்துள்ளார். கர்நாடக அமைச்சரின் இந்த மிரட்டல் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!