India
வேறு ஆண்களுடன் பேசியதால் ஆத்திரம்.. காதலனால் காதலிக்கு நேர்ந்த கொடூரம்: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியைச் சேர்ந்தவர் மனிஷா ஜெய்ஸ்வார். இளம் பெண்ணான இவர் சில ஆண்டுகளாக அகிலேஷ் குமார் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனிஷா ஜெய்ஸ்வார் வேறு சில ஆண்களுடன் பேசி பழகிவந்துள்ளார். இதனால் காதலிமீது அகிலேஷ் குமாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இது குறித்துக் கேட்பதற்காகக் காதலன் காதலி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது காதலர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அகிலேஷ் குமார் அங்கிருந்த கத்தியை எடுத்து காதலி மணிஷா ஜெய்ஸ்வரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மணிஷா ஜெய்வரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் காதலியைக் கொலை செய்த காதலன் அகிலேஷ் குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“விஜயின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக விரைவில் கிழியும்” : முரசொலி தலையங்கம்!
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!