India
வேறு ஆண்களுடன் பேசியதால் ஆத்திரம்.. காதலனால் காதலிக்கு நேர்ந்த கொடூரம்: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியைச் சேர்ந்தவர் மனிஷா ஜெய்ஸ்வார். இளம் பெண்ணான இவர் சில ஆண்டுகளாக அகிலேஷ் குமார் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனிஷா ஜெய்ஸ்வார் வேறு சில ஆண்களுடன் பேசி பழகிவந்துள்ளார். இதனால் காதலிமீது அகிலேஷ் குமாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இது குறித்துக் கேட்பதற்காகக் காதலன் காதலி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது காதலர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அகிலேஷ் குமார் அங்கிருந்த கத்தியை எடுத்து காதலி மணிஷா ஜெய்ஸ்வரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மணிஷா ஜெய்வரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் காதலியைக் கொலை செய்த காதலன் அகிலேஷ் குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!