India
வேறு ஆண்களுடன் பேசியதால் ஆத்திரம்.. காதலனால் காதலிக்கு நேர்ந்த கொடூரம்: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியைச் சேர்ந்தவர் மனிஷா ஜெய்ஸ்வார். இளம் பெண்ணான இவர் சில ஆண்டுகளாக அகிலேஷ் குமார் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனிஷா ஜெய்ஸ்வார் வேறு சில ஆண்களுடன் பேசி பழகிவந்துள்ளார். இதனால் காதலிமீது அகிலேஷ் குமாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இது குறித்துக் கேட்பதற்காகக் காதலன் காதலி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது காதலர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அகிலேஷ் குமார் அங்கிருந்த கத்தியை எடுத்து காதலி மணிஷா ஜெய்ஸ்வரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மணிஷா ஜெய்வரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் காதலியைக் கொலை செய்த காதலன் அகிலேஷ் குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
”தமிழ்நாடு மீது பா.ஜ.கவுக்கு இருப்பது கோபம் அல்ல தீராத வன்மம்” : சு.வெங்கடேசன் ஆவேசம்!
-
யானை பசிக்கு சோளப்பொறியா? : தமிழ்நாடு கேட்டது ரூ.38,000 கோடி - ஒன்றிய அரசு கொடுத்தது ரூ.275 கோடி!
-
NDA அரசாக மாறிய மோடி அரசு... பாஜக பிரசாரத்தில் வியக்கத்தக்க மாற்றம்... தோல்வி பயத்தில் தவழும் பாஜக!
-
“கோடை காலத்தில் குடிநீர் கிடைக்க அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்” - முதலமைச்சர் உத்தரவு!