India
வேறு ஆண்களுடன் பேசியதால் ஆத்திரம்.. காதலனால் காதலிக்கு நேர்ந்த கொடூரம்: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியைச் சேர்ந்தவர் மனிஷா ஜெய்ஸ்வார். இளம் பெண்ணான இவர் சில ஆண்டுகளாக அகிலேஷ் குமார் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனிஷா ஜெய்ஸ்வார் வேறு சில ஆண்களுடன் பேசி பழகிவந்துள்ளார். இதனால் காதலிமீது அகிலேஷ் குமாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இது குறித்துக் கேட்பதற்காகக் காதலன் காதலி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது காதலர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அகிலேஷ் குமார் அங்கிருந்த கத்தியை எடுத்து காதலி மணிஷா ஜெய்ஸ்வரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மணிஷா ஜெய்வரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் காதலியைக் கொலை செய்த காதலன் அகிலேஷ் குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!