India
சிறுமியை மிரட்டி 1 மாதமாக கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொலை குற்றவாளியின் வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் !
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை அடுத்த ஒரு கிராமத்தில் 11 வயதில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவரது பெற்றோர்கள் கூலி வேலை பார்த்து வரும் நிலையில், சிறுமியை வீட்டில் தனியே விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த மாதம், சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான ரோஷன் (வயது 29) என்ற இளைஞர், சிறுமியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். மேலும் அவருக்கு சில பொருட்களும், பணமும் தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் ரோஷன்.
சிறுமியை உள்ளே அழைத்து சென்றவுடன் அங்கே ரோஷனின் நண்பர்கள் கும்பலாக இருந்தனர். இதனால் பதற்றமடைந்த சிறுமி வெளியே வர முயன்ற போது, அவர்கள் அவரை விடவில்லை. ரோஷன் மற்றும் அவரது நண்பர்கள் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியிடம் பணத்தை கொடுத்து, இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் உள்ளனர்.
இதனால் பயந்த அந்த சிறுமி, வெளியில் சொல்லாமல் இருந்ததால், சில நாட்களிலேயே ரோஷனின் 3 நண்பர்கள் மீண்டும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்ட 40 வயதுமிக்க நபர் ஒருவரும், அந்த சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து ஒரு கொலை வழக்கில் ரோஷனை கைது செய்த காவல்துறையினர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததையும் வாக்குமூலமாக அளித்தார். ரோஷனின் வாக்குமூலத்தின் படி, அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயதுமிக்க கஜனன் என்ற நபருடன் சேர்த்து மொத்தம் 9 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 வயது சிறுமியை 1 மாதகாலமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 பேரின் செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !