India
கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழப்பு.. பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தில் நடந்த அவலம்!
குஜராத் மாநிலம், அகமதாபாத் மற்றும் போட்டட் மாவட்டங்களில் கடந்த 24ம் தேதி சட்ட விரோதமாகக் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை வாங்கிக் குடித்த பலருக்கு அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 28 பேர் சிகிச்சை பலனின்றி இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இன்னும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து பா.ஜ.க அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அமித் சாவ்தா, "பா.ஜ.க தலைவர்களின் ஆதரவு மற்றும் போலிஸார் உதவியுடனே மாநிலத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருகிறது. மேலும் கள்ளச்சாராயம் விற்கும் கும்பலிடம் இருந்து போலிஸார் மாதம்தோறும் லஞ்சம் வாங்கி வருகின்றனர்" என குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத் மது விலக்கு மாநிலம் என்பது குறிப்பிடதக்கது.
Also Read
-
ஜூம்லா விடும் மோடி அரசு : “மக்களை என்றைக்காவது மகிழச் செய்தது உண்டா?” - கி.வீரமணி சரமாரி கேள்வி!
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!