India
ஒரு மழைக்கே தாங்கல.. சுக்குநூறாக உடைந்த புதிய பாலம்: வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.க ஊழல்!
ரோட்டுல குழி இருந்து பாத்திருப்பீங்க. ஆனா ரோடே குழியா இருந்து பாத்திருக்கீங்களா. பூகம்பம் வந்தா கூட இப்படி ஆகியிருக்குமா-னு தெரியல. ஆன பா.ஜ.க-வோட ஊழல் இப்படி தலைவிரிச்சு ஆடியிருக்கே.
மோடி அரசு பதவியேற்ற நாட்களில் இருந்தே, பொதுமக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஆரம்பத்தில், நாட்டையே மாற்றப்போவதாக ஆட்சியை பிடித்த பா.ஜ.க, நாட்டில் இருந்த இருந்த அரசு துறையை தான் தனியார் துறையாக மாற்றிவருகிறது. இதுமட்டுமின்றி, அரசு நிர்வகித்து வரும் பல்வேறு துறைகளிலும், ஊழல் தலைவிரித்தாடி வருகின்றது.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம், பா.ஜ.க அரசின் மோசமான ஆட்சியை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. அதாவது, போபால் மற்றும் ஹோஷங்காபாத் நகரங்களை இணைக்கும் வகையில் 529 கோடி ரூபாயில், பாலம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால், இந்த பாலம் கட்டப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், தனது முதல் மழைக்கே பெரும் சேதம் அடைந்துள்ளது.
இதையடுத்து பா.ஜ.க-வோட ஊழல் இப்படி தலைவிரிச்சு ஆடியிருக்கே.. என்று நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி, பா.ஜ.க என்றாலே ஊழல் தான் என்றும், மோடி மாடல் என்றாலே ஊழல் மாடல் தான் என்றும், பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர்.
அம்மிக் கல்லை கொத்த தெரியாதவன் கொத்தியது போல் உள்ளது என் கட்சிக்காரரின் கபாலம் என்று வடிவேலு சொல்வது போல தான், மோசமாக உள்ள இந்த சாலையை பார்க்கும்போது தோன்றுகிறது நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!