India
ரூ. 4-க்கு ஒரு லிட்டர் மாட்டு கோமியம்.. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் சத்தீஸ்கர் அரசு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக பூபேல் பாகல் உள்ளார். இந்த மாநிலத்தில் ஏற்கனவே கால்நடைகளின் சாணத்தை விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்து வருகிறது.
இப்படி கொள்முதல் செய்யப்படும் சாணங்களைக் கொண்டு பல்வேறு வகையான பொருள்கள் தயாரிக்கப்பட்டு லாபம் ஈட்டி வருவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
இதையடுத்து அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் கால்நடை வளர்ப்பு தொடர்பாக ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் ஒன்று தான் கோமியம் கொள் முதல் திட்டம்.
விவசாயிகளிடம் இருந்து மாட்டுச் சாணத்தைக் கொள்முதல் செய்வது போலவே கோமியத்தைக் கொள்முதல் செய்யத் திட்டம் வகுத்துள்ளது. இந்த திட்டத்தை ஜூலை 28ம் தேதி அம்மாநில முதல்வர் பூபேஸ் பாகல் தொடங்கி வைக்க உள்ளார்.
இத்திட்டத்தின் படி விவசாயிகளிடம் இருந்து ஒரு லிட்டர் கோமியம் ரூ.4க்கு கொள்முதல் செய்ய அம்மாநில அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மக்களை விட கூடுதலாகக் கால்நடைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போல் சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசும் இதைக் கையில் எடுக்கிறதோ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி
-
“நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வர்ற வரைக்கும் தமிழ்நாடு தாங்காது CM Sir” : உதயநிதி கண்டனம்!
-
‘சிங்கப்பெண் திட்டம்’ ரத்தான நாளில்... பட்டு வேட்டி - சட்டையில் கலக்கிய ‘போட்டோ’ முதல்வர் விஜய்!
-
“விஜய் அரசின் சரிவு தொடங்கி இருக்கிறது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
சோபா மாடல் ஆட்சியில் போலீசாராலும் பாதுகாப்பு இல்லை போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை : உதயநிதி கடும் கண்டனம்