India
மாமனாரை காலால் மிதித்து கொலை செய்த மருமகள்.. நிலத்தகராரில் நடத்த அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன?
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாரா மாவட்டத்திலுள்ள நாத்புரா கிராமத்தை சேர்ந்தவர் பதியா கட்டாரா. இவருக்கும் இவர் மருமகளுக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று மாமனாருக்கும் மருமகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மருமகள் மாமனாரை தாக்கியுள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மருமகளை பிடித்துள்ளனர்.
ஆனாலும், ஆத்திரம் அடங்காத மருமகள் காலால் மாமனாரின் அந்தரங்க பகுதியில் பலமுறை எட்டி உதைத்துள்ளார். இதில் சுருண்டு விழுந்த மாமனாரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இரண்டு நாள் மருத்துவமனையில் அவர் இருந்த நிலையில், பின்னர் வீடு திரும்பியுள்ளார். ஆனால் அடுத்த இரண்டு நாளில் அவர் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அந்தரங்க பகுதியில் வலியோடு துடித்த அவரை மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!