India
பாலியல் வழக்கில் சிறைக்குச் சென்ற காதலன்.. தவறை சரி செய்ய நினைத்த காதலிக்கு நடந்த சோகம் : பின்னணி என்ன ?
மும்பையின் விக்ரோலி பகுதியை சேர்ந்த ஷியாம் ஹண்டே (26) என்பவரும் அதே பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்தனர். இவர்கள் இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டுக்கு தெரிந்த நிலையில் ஷியாம் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஷியாம் ஹண்டேவை கைது செய்த போலிஸார், அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் பல மாதம் அவர் சிறையில் இருந்த நிலையில் ஜாமினில் வெளிவந்துள்ளார். சிறையில் இருந்து வெளிவந்ததும் அவர் காதலி அவரை தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.
ஆனால், தன்னை சிறைக்கு அனுப்ப காரணமாக இருந்த காதலியிடம் பேச ஷியாமுக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் வேறு இடத்துக்கு சென்று வசிக்கத் தொடங்கியுள்ளார். ஆனாலும், அவரிடம் பேச அவர் காதலி தொடர்ந்து முயன்று வந்துள்ளார்.
இதனால் தனது காதலரை தன்னிடம் பேசவைக்க அவரது காதலி புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி காதலிக்கும்போது ஷியாமின் பைக் சாவி ஒன்று அவரின் காதலியிடம் இருந்துள்ளது. அதை தனது நண்பரிடம் கொடுத்த ஷியாமின் காதலி அதை வைத்து ஷியாமின் பைக்கை திருடியுள்ளார். தனது பைக் திருடப்பட்டது தொடர்பாக ஷியாம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், சிறிது நாட்களுக்கு பிறகு ஷியாமை தொடர்புகொண்ட அவரின் காதலி, மீண்டும் என்னுடன் பேச ஆரம்பித்தால், காணாமல்போன உன்னுடைய பைக் எங்கிருக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும் என மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷியாம் போலிஸில் இது தொடர்பாக கூறியுள்ளார்.
பின்னர் போலிஸ் இது தொடர்பாக அவரின் காதலியை அழைத்து விசாரித்தபோது காதலரை பேச வைக்க அவரின் பைக்கை திருடியது தெரியவந்தது. காதலி கூறிய தகவலின்படி அங்கு சென்று பைக்கை தேடியபோது அதை டிராபிக் போலிஸார் எடுத்துச்சென்றது தெரியவந்தது.
பின்னர் திருட்டு வழக்கில் போலிஸார் ஷியாமின் முன்னாள் காதலியை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!