India

மனைவி, மகன் வெட்டி கொலை.. தந்தை தூக்கிட்டு தற்கொலை: கர்நாடகாவில் பகீர் சம்பவம்!

கர்நாடக மாநிலம், பங்கனே கிராமத்தைச் சேர்ந்தவர் ராமா மராட்டி. கூலி தொழிலாளியான இவருக்கு டாக்கிமராத்தி என்ற மனைவியும், லட்சுமண மராத்தி உட்பட 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கூலி வேலைக்குச் சென்று விட்டு ராமா மராட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் மது குடித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி டாக்கி மராத்தியை திடீரென கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

அப்போது, இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மகன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மகனை விரட்டிச் சென்று கத்தியால் வெட்டி ராமா மராட்டி கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி ,மகனை கொலை செய்த துக்கம் தாங்காமல் ராமா மராட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின்னர், வெளியே சென்ற ராமா மராட்டியின் இரண்டாவது மகன் வீட்டிற்கு வந்தபோது தாய், தம்பி, தந்தை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வந்த போலிஸார் மூன்று பேரின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பதகராறுகாரணமாக தனது மனைவி மற்றும் மகனைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஜன்னல் வழியாக சாவியை எடுத்து 20 சவரன் நகை கொள்ளை..புகார் கொடுத்த ஒரே நாளில் குற்றவாளியை பிடித்த போலிஸ்!