India
மனைவி, 2 குழந்தைகள் கொலை.. தந்தை விஷம் குடித்து தற்கொலை: விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!
புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர் தியாகராஜன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பச்சைவாழி என்ற மனைவியும், 7 வயதில் பெண் மற்றும் 3 வயதில் ஆண் குழந்தையும் இருந்தது.
இந்நிலையில், தியாகராஜன் இன்று காலை உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கள் அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள் என கவலையுடன் பேசியுள்ளார்.
இதையடுத்து அவரது பேச்சில் சந்தேகம் இருந்ததால் உறவினர்கள் தியாகராஜன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது தியாகராஜன் மற்றும் அவரது மனைவி பச்சைவாழி, இந்த தம்பதியின் 2 குழந்தைகளும் சடலமாக இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து உடனே போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த போலிஸார் 4 பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் கடன் சுமை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகள் இருவரைக் கொலை செய்துவிட்டு, தியாகராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொலை செய்து விட்டு ஆட்டோ ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டிற்கான 152 மருத்துவ இடங்களை கைவிட்டுவிடக்கூடாது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்!
-
“திருச்சியில் கொடூரம்.. மது கொடுத்து சிறுமிக்கு கூட்டு பா*யல் வன்கொடுமை.. சாலையில் வீசிச் சென்ற அவலம்”
-
“ஒவ்வொரு வீட்டிலும் கலைஞரின் திட்டங்கள்.. மக்களுக்கான தலைவர்.. இதுதான் கலைஞர்” : கனிமொழி எம்.பி புகழாரம்!