India
மாணவிகள் உட்பட 40 பேருக்கு பாலியல் தொல்லை.. கர்நாடக அரசுப்பள்ளியில் நடந்த கொடூரம் !
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் பகுதியை அடுத்துள்ள சிங்கபுரா என்ற கிராமத்தில் அரசு உயர் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் முகமது அசாருதீன். இவர் பாடம் சொல்லி கொடுப்பதாக கூறி பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வதாக புகார்கள் எழுந்தது.
அதுமட்டுமின்றி அவர் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியைகளிடமும் தனது லீலைகளை காட்டி வந்துள்ளார். மேலும் இவரும் பெண் ஆசிரியை ஒருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து முகமது அசாருதீன் தலைமைறைவாகி விட்டார். பின்னரே தன்னிடம் டியூசன் படிக்க வரும் மாணவ -மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.
எனவே ஆசிரியர் முகமது அசாருதீனைபணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவரை போலீசார் கைது செய்து உரிய விசாரணை நடத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆசிரியர் முகமது அசாருதீனை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவரை போலிஸார் கைது செய்து உரிய விசாரணை நடத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முகமது அசாருதீனை வலைவீசி தேடி வருகின்றனர்.
அதோடு காவல்துறை நடத்திய விசாரணையில் அவர், மாணவிகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், பலரை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!