India
ஓடிக்கொண்டிருந்த ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து ரயிலை நிறுத்திய பயணிகள்.. நள்ளிரவில் பரபரப்பு!
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் தக்க்ஷன எக்ஸ்பிரஸ் ரயில் தெலுங்கானா மாநிலம் பகிடிப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது அதில் லக்கேஜ்கள் ஏற்றப்பட்டிருந்த பெட்டியில் திடீரென்று தீப்பற்றியது.
பின்னர் தீ வேகமாக எரிய துவங்கியதும் இதை பார்த்த பயணிகள் சிலர் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ரயில் நின்றதும் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கியுள்ளனர். இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தகவலில் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் லக்கேஜ் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தால் லக்கேஜ் பெட்டியில் பொருள்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகின.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை என போலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீ அணைக்கப்பட்ட பின்னர் தக்க்ஷன எக்ஸ்பிரஸ் அங்கிருந்த கிளம்பி சென்றது.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!