India
“நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலியாகியிருக்கலாம்”: மணிப்பூர் முதலமைச்சரின் கருத்தால் பெரும் பரபரப்பு !
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இதற்காக இந்த பகுதியில் ஏராளமான வீரர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புக்கு ராணுவ வீரர்களும் அங்கு இருந்தனர். இந்த நிலையில் இங்கு கடந்த புதன்கிழமை இரவு பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் இங்கு வேலை இருந்த ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் சிக்கினர். இந்த தகவல் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மண்ணில் புதைந்து போனவர்களை தேடும் பணியில் ஒன்றிய, மாநில அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன. இதுவரை ராணுவ 18 வீரர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
இந்த நிலையில் மீட்பு பணி நடைபெறும் இடத்துக்கு வந்த மாநில முதல்வர் பைரன் சிங் மீட்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், "நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களாகி விட்டதால், மண்ணில் புதைந்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பது வேதனை அளிக்கிறது. 80க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம்" என கூறியுள்ளார்.
இந்த தகவல் அந்த பகுதியில் மண்ணில் புதைந்திருந்தவர்களின் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என மீட்புப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !