India
ஆட்டோ மீது அறுந்து விழுந்த மின் கம்பி.. உடல் கருகி 8 பேர் பலி: காலையில் நடந்த கோர விபத்து!
ஆந்திரா மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஆட்டோ மீது உயர்மின் அழுத்த கம்பி விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இன்று காலை விவசாய வேலைக்காக ஒரே ஆட்டோவில் பலர் சென்றுள்ளனர். இந்த ஆட்டோ சில்லகொண்டையா பள்ளி கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாகச் சாலையிலிருந்த மின் கம்பத்தில் மோதியுள்ளது.
இதனால் உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து ஆட்டோ மீது விழுந்தவுடன் தீ பிடித்துள்ளது. இந்த தீ விபத்தில் ஆட்டோவில் இருந்தவர்கள் சிக்கியுள்ளனர். இது குறித்து உடனே மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து பற்றி அறிந்து அங்கு வந்த போலிஸாரும், தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் மீட்புப்பணியில் ஈடுபட்டபோது உடல் கருகி 8 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் பலர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆட்டோவில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை. இந்த கோர விபத்து குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலையிலேயே இப்படியான கோர விபத்து நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!