India
"ஆர்.எஸ்.எஸ்ஸின் வெறுப்புக்கு எதிராக இரக்க சித்தாந்தம் ஒன்றிணைகிறது" - ராகுல் காந்தி பேச்சு.!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார்.
பாஜக சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து விட்ட நிலையில், இன்று எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக சார்பில் எம்.பி திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "குடியரசுத் தலைவர் தேர்தலில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து யஷ்வந்த் சின்ஹவை ஆதரிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் கோபம் மற்றும் வெறுப்பு சித்தாந்தத்திற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் இரக்க சித்தாந்தம் ஒன்றாக நிற்கிறது" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“பிரதமர் மோடியின் பேச்சு தரங்கெட்டு இருக்கிறது” - வைகோ கடும் விமர்சனம் !
-
சுயமரியாதைத் திருமண சட்டம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது- முன்னாள் நீதிபதி சந்துரு!
-
ஒரு நாள் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் : பாஜகவை விமர்சித்து அவர் கூறியது என்ன ?
-
கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
"அவ்வளவுதான், மும்பை இந்தியன்ஸ் அணியின் கதை முடிந்து விட்டது" - இர்பான் பதான் கருத்து !