India
கண்ணாடி பாட்டில்களில் கண்டெடுக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள்.. நெஞ்சை பதற வைக்கும் பகீர் புகைப்படங்கள் !
கர்நாடகாவில் கண்ணாடி பாட்டில்களில் 7 கலைக்கப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் சிலர் நேற்று துணிகளை துவைக்க வந்துள்ளனர். அப்போது அங்கு கிடந்த கண்ணாடி பாட்டில்களைப் பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது அந்த பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் போலிஸூக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். அவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பினர். அவர்கள் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. பாலச்சந்திர ஜர்கிஹோலி கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என தெரிவித்தார். கர்நாடகாவில் கண்ணாடி பாட்டில்களில் 7 கலைக்கப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read
-
“வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் முப்பெரும் விழா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் : “தேர்தல் ஆணையத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு பயப்படாது” - முரசொலி!
-
நாளை நடைபெறவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ? சென்னையில் எங்கு ? விவரம் உள்ளே !
-
திமுக முப்பெரும் விழா... கரூர் அழைக்கிறது வாரீர் : உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
முதலமைச்சரின் துரித செயல்பட்டால் நேபாளத்தில் இருந்து 116 தமிழர்கள் மீட்பு... உதவி எண்கள் அறிவிப்பு !