India
“கடவுள் பக்தியில் புனித நீரோடு சிலையை விழுங்கிய பக்தர்?” : தொண்டையில் சிக்கிய சிலையால் நடந்த விபரீதம்!
கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தில், 45 வயது மிக்க நபர் ஒருவர் தனக்கு தொண்டை வலி இருப்பதோடு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனையை அணுகினார். எனவே அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு X-Ray எடுத்து பரிசோதனை செய்தனர். X-Ray ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதில், அவரது தொண்டையிலுள்ள உணவு குழாயில் இரும்பு வடிவிலான பொருள் ஒன்று சிக்கியுள்ளது தெரிந்தது. பின்னர் இது குறித்து அவரிடம் விசாரித்த போது, தான் எதையும் உட்கோள்ளவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் கேட்கையில், தான் வழக்கமாக அருகிலிருக்கும் ஒரு கோயிலில் நீராடி, அந்த நீரை பருகுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, அவருக்கு ENDOSCOPY என்ற சிகிச்சை மூலம் தொண்டையில் சிக்கியிருந்த பொருளை தொண்டை வழியே வெளியே எடுத்தனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்கு மூச்சு விடுவதில் சிரமமாக இருப்பதாக அணுகினார்.
அவரை பரிசோதனை செய்ததில், தொண்டையில் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இந்த சிகிச்சையின்போது உணவுக் குழாயில் சிலையின் இடது கால் சிக்கிக் கொண்டதால் எங்களுக்கு மிகவும் கடினமாகவும் சவாலாக இருந்தது. எனவே எதை சாப்பிட வேண்டுமென்றால் பார்த்து சாப்பிடுங்கள், பருகுங்கள்" என்றனர்.
Also Read
-
“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!