India
“600க்கு 597 மதிப்பெண்.. மாநிலத்தில் 2ம் இடம்” : ஹிஜாப் பிரச்சனைக்கு மத்தியிலும் சாதித்த இஸ்லாமிய மாணவி!
கர்நாடகா மாநிலத்தில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 22ல் துவங்கி மே 18 வரை நடைபெற்றது. சுமார் 1,076 மையங்களில் நடந்த இந்த தேர்வில் மொத்தம், 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ - மாணவியர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
ஹிஜாப் பிரச்சனை உள்ளிட்ட முக்கிய காரணங்களினால், தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத வரவில்லை. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து, மதிப்பெண் சரிபார்ப்பு பணியும் முடிந்து விட்டது.
இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பி.யு., போர்டு அலுவலகத்தில் கடந்த 17ம் தேதி காலை 11:00 மணிக்கு, தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ், தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அந்த முடிவில், மாணவிகள் 68.72%, மாணவர்கள் 55.22% தேர்ச்சி பெற்றிருந்திருந்தனர். துணைத் தேர்வு தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹிஜாப் பிரச்சனையிலும் கல்வியில் கவனம் எழுத்தி தேர்வு எழுதிய இஸ்லாமிய மாணவி இல்ஹாம் 600க்கும் 597 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இஸ்லாமிய மாணவிக்கு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மங்களூருவில் உள்ள செயின்ட் அலோசியஸ் பள்ளி மாணவியான இல்ஹாம், 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ துறையில் பணியைத் தொடர விரும்பியதால் இதனை சாதித்துள்ளார்.
இதுகுறித்து மாணவி இல்ஹாம் கூறுகையில், “இது கடினமான நேரம். இருப்பினும், எனது நோக்கம் தெளிவாக இருந்தது, எனது கவனம் படிப்பில் இருந்தது. என்னைப் போல பல மாணவிகள் தேர்வு எழுதியிருந்தால் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தி.மு.க வெள்ளை அறிக்கை vs த.வெ.க வெள்ளை அறிக்கை : தி.மு.க IT WING விளக்கம்!
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!