India
நொடிபொழுது தாமதித்து இருந்தாலும் .. மூதாட்டி உயிரை காப்பாற்றிய போலிஸ்: திக் திக் வீடியோ!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லலித்புர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தைக் கடந்து நடைமேடைக்கு வர முயன்றுள்ளார். அப்போது அதே தண்டவாளத்தில் வேகமான விரைவு ரயில் ஒன்று வந்துள்ளது.
இதைக் கண்ட ரயில்வே போலிஸார் ஒருவர் அந்த பெண்ணை தண்டவாளத்தைக் கடக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். ஆனால் அதை கவனிக்காத அந்த வயதான பெண் தண்டவாளத்தைக் கடந்துள்ளார்.
உடேன ரயில்வே போலிஸ் துரிதமாக செய்யப்பட்டு பாய்ந்து சென்று மூதாட்டியை நடைமேடைக்கு இழுத்து அவரது உயிரைக் காப்பாற்றினார். போலிஸார் சில நொடிகள் தாமதமாக செயல்பட்டிருந்தால் கூட மூதாட்டி ரயிலில் ரயில் மோதி உயிரிழந்திருப்பார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய போலிஸாருக்கு பாராட்டு தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!