India
நொடிபொழுது தாமதித்து இருந்தாலும் .. மூதாட்டி உயிரை காப்பாற்றிய போலிஸ்: திக் திக் வீடியோ!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லலித்புர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தைக் கடந்து நடைமேடைக்கு வர முயன்றுள்ளார். அப்போது அதே தண்டவாளத்தில் வேகமான விரைவு ரயில் ஒன்று வந்துள்ளது.
இதைக் கண்ட ரயில்வே போலிஸார் ஒருவர் அந்த பெண்ணை தண்டவாளத்தைக் கடக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். ஆனால் அதை கவனிக்காத அந்த வயதான பெண் தண்டவாளத்தைக் கடந்துள்ளார்.
உடேன ரயில்வே போலிஸ் துரிதமாக செய்யப்பட்டு பாய்ந்து சென்று மூதாட்டியை நடைமேடைக்கு இழுத்து அவரது உயிரைக் காப்பாற்றினார். போலிஸார் சில நொடிகள் தாமதமாக செயல்பட்டிருந்தால் கூட மூதாட்டி ரயிலில் ரயில் மோதி உயிரிழந்திருப்பார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய போலிஸாருக்கு பாராட்டு தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!