India
“ஒரே ஆண்டில் இடம்பெயர்ந்த 50 லட்சம் இந்தியர்கள்” : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - காரணம் என்ன தெரியுமா?
சமீப ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தால் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன. மேலும் உக்ரைன் போர், ஏழ்மை போன்ற செயற்கை பேரழிவுகள் காரணமாகவும், பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இடம் பெயர்வு குறித்து ஆய்வு நடத்திய ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணை அமைப்பு, கடந்த ஆண்டில் வன்முறை, உணவுப் பாதுகாப்பின்மை, மனித உரிமை மீறல்கள், பருவநிலை மாற்றம், உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் 10 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக சீனாவில் மிகப்பெரிய அளவில் 60 லட்சம் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், பிலிப்பைன்ஸில் 57 லட்சம் பேரும், இந்தியாவில் 49 லட்சம் பேரும் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் 2021ஆம் ஆண்டின் இறுதியில் போர், வன்முறை காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9 கோடி என கூறப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைவிட எட்டு சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் அதே நேரம் இது 10 ஆண்டுகளுக்கு முந்தைய எண்ணிக்கையைவிட இருமடங்கு அதிகமாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பருவ நிலை மாற்றம் காரணமாக இடம் பெயர்ந்தவர்களில் பலர் வெகு விரைவில் தங்கள் சொந்த இடத்துக்கு திரும்புவர் எனவும், ஆனால் வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது தங்கள் சொந்த இடத்துக்கு திரும்புவர் எண்ணிக்கை குறையும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!