India
ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் கொண்ட யானை உயிரிழப்பு.. கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த வனத்துறை!
மைசூர் மாவட்டம் கபினி அணையைச் சுற்றி பந்திப்பூர் வனப்பகுதி உள்ளது. இங்கு போகேஸ்வரன் என்ற காட்டு யானை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் அமைதியாக சுற்றிவரும். இதனாலேயே இந்த போகேஸ்வரன் யானையை அப்பகுதி மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும், ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் உடைய காட்டு யானை ஆகும் இது. அதன் தந்தங்கள் சுமார் 7 அடி முதல் 8 அடி வரை இருக்கும். தும்பிக்கை போன்று தரையில் படும் அளவுக்கு அதன் தந்தங்கள் இருக்கும்.
இந்நிலையில் 68 வயதான போகேஸ்வரன் யானை,பந்திப்பூர் வனப்பகுதியில் நேற்று இறந்துகிடந்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் வனத்துறையினர், யானையின் 2 தந்தங்களை வெட்டி எடுத்தனர். இதையடுத்து அதேபகுதியில் யானையின் உடலை அருகே குழிதோண்டி வனத்துறை அதிகாரிகள் புதைத்துக் யானைக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும்,நீளமான தந்தங்களால் உணவு எதுவும் சாப்பிட முடியாமல் யானை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட இந்த யானை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!