India
ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் கொண்ட யானை உயிரிழப்பு.. கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த வனத்துறை!
மைசூர் மாவட்டம் கபினி அணையைச் சுற்றி பந்திப்பூர் வனப்பகுதி உள்ளது. இங்கு போகேஸ்வரன் என்ற காட்டு யானை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் அமைதியாக சுற்றிவரும். இதனாலேயே இந்த போகேஸ்வரன் யானையை அப்பகுதி மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும், ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் உடைய காட்டு யானை ஆகும் இது. அதன் தந்தங்கள் சுமார் 7 அடி முதல் 8 அடி வரை இருக்கும். தும்பிக்கை போன்று தரையில் படும் அளவுக்கு அதன் தந்தங்கள் இருக்கும்.
இந்நிலையில் 68 வயதான போகேஸ்வரன் யானை,பந்திப்பூர் வனப்பகுதியில் நேற்று இறந்துகிடந்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் வனத்துறையினர், யானையின் 2 தந்தங்களை வெட்டி எடுத்தனர். இதையடுத்து அதேபகுதியில் யானையின் உடலை அருகே குழிதோண்டி வனத்துறை அதிகாரிகள் புதைத்துக் யானைக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும்,நீளமான தந்தங்களால் உணவு எதுவும் சாப்பிட முடியாமல் யானை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட இந்த யானை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!