India
ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் கொண்ட யானை உயிரிழப்பு.. கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த வனத்துறை!
மைசூர் மாவட்டம் கபினி அணையைச் சுற்றி பந்திப்பூர் வனப்பகுதி உள்ளது. இங்கு போகேஸ்வரன் என்ற காட்டு யானை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் அமைதியாக சுற்றிவரும். இதனாலேயே இந்த போகேஸ்வரன் யானையை அப்பகுதி மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும், ஆசியாவிலேயே மிக நீளமான தந்தம் உடைய காட்டு யானை ஆகும் இது. அதன் தந்தங்கள் சுமார் 7 அடி முதல் 8 அடி வரை இருக்கும். தும்பிக்கை போன்று தரையில் படும் அளவுக்கு அதன் தந்தங்கள் இருக்கும்.
இந்நிலையில் 68 வயதான போகேஸ்வரன் யானை,பந்திப்பூர் வனப்பகுதியில் நேற்று இறந்துகிடந்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் வனத்துறையினர், யானையின் 2 தந்தங்களை வெட்டி எடுத்தனர். இதையடுத்து அதேபகுதியில் யானையின் உடலை அருகே குழிதோண்டி வனத்துறை அதிகாரிகள் புதைத்துக் யானைக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும்,நீளமான தந்தங்களால் உணவு எதுவும் சாப்பிட முடியாமல் யானை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட இந்த யானை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!