India

மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த 22 வயது இளைஞர்.. மகாராஷ்டிராவில் பகீர் சம்பவம்!

மகாராஷ்டிரா மாநிலம், குஸ்கானில் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் தக்டு கோகரே. இவரது மாட்டு தொழுவத்தில் இருந்து மாடுகள் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சதீஷ் அங்கு சென்றுபார்த்தபோது இளைஞர் ஒருவர் ஆடையின்றி மாட்டை பாலியல் வன்கொடுமை செய்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிறகு இவர் வந்ததை அறிந்த அந்த இளைஞர் உடனே அங்கிருந்து தப்பிச் ஒடியுள்ளார். பின்னர் அங்கிருந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதேபேகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர்தான் மாட்டை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் தீபக்கைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் ஒருவர் மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த சொகுசு பேருந்து.. உடல் கருகி 7 பேர் பலி: விபத்திற்குக் காரணம் என்ன?