India
"பிணந்தின்னி கழுகு பா.ஜ.க".. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் தாக்கு!
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பா.ஜ.க தனது 8 ஆண்டுக்கால ஆட்சியைப் பெருமையாகப் பேசி பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு மோசமான 8 ஆண்டுகள் என பா.ஜ.க ஆட்சியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட மக்களுக்கு எதுவுமே செய்யாத பா.ஜ.க 2024ம் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை என மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பிணந்தின்னி கழுகு போன்றது பா.ஜ.க என கடுமையாக விமர்சித்துள்ளார் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி.
இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,"பா.ஜ.க ஒரு பயனற்ற கட்சி. நாடு கண்டிராத திறமையற்ற கட்சி இது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிப்பது நாட்டு மக்களுக்கு நல்லது.
யாராவது உயிரிழப்பார்கள் அப்போது அந்த உடலைச் சாப்பிட முடியும் என காத்திருக்கும் பிணந்தின்னி கழுகு போன்றது பா.ஜ.க. இவர்களின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பெரிய ஊழல். இதன் மூலம் நாம் என்ன சாதித்தோம்? ரூ.500 கள்ளநோட்டுகள் 102% அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!