India
"பிணந்தின்னி கழுகு பா.ஜ.க".. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் தாக்கு!
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பா.ஜ.க தனது 8 ஆண்டுக்கால ஆட்சியைப் பெருமையாகப் பேசி பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு மோசமான 8 ஆண்டுகள் என பா.ஜ.க ஆட்சியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட மக்களுக்கு எதுவுமே செய்யாத பா.ஜ.க 2024ம் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை என மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பிணந்தின்னி கழுகு போன்றது பா.ஜ.க என கடுமையாக விமர்சித்துள்ளார் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி.
இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,"பா.ஜ.க ஒரு பயனற்ற கட்சி. நாடு கண்டிராத திறமையற்ற கட்சி இது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிப்பது நாட்டு மக்களுக்கு நல்லது.
யாராவது உயிரிழப்பார்கள் அப்போது அந்த உடலைச் சாப்பிட முடியும் என காத்திருக்கும் பிணந்தின்னி கழுகு போன்றது பா.ஜ.க. இவர்களின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பெரிய ஊழல். இதன் மூலம் நாம் என்ன சாதித்தோம்? ரூ.500 கள்ளநோட்டுகள் 102% அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!
-
“மே 4ஆம் தேதி உழைப்பிற்கான பலன் கிடைக்கும்... நல்லாட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!