India
"பிணந்தின்னி கழுகு பா.ஜ.க".. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் தாக்கு!
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பா.ஜ.க தனது 8 ஆண்டுக்கால ஆட்சியைப் பெருமையாகப் பேசி பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு மோசமான 8 ஆண்டுகள் என பா.ஜ.க ஆட்சியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட மக்களுக்கு எதுவுமே செய்யாத பா.ஜ.க 2024ம் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை என மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பிணந்தின்னி கழுகு போன்றது பா.ஜ.க என கடுமையாக விமர்சித்துள்ளார் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி.
இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,"பா.ஜ.க ஒரு பயனற்ற கட்சி. நாடு கண்டிராத திறமையற்ற கட்சி இது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிப்பது நாட்டு மக்களுக்கு நல்லது.
யாராவது உயிரிழப்பார்கள் அப்போது அந்த உடலைச் சாப்பிட முடியும் என காத்திருக்கும் பிணந்தின்னி கழுகு போன்றது பா.ஜ.க. இவர்களின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பெரிய ஊழல். இதன் மூலம் நாம் என்ன சாதித்தோம்? ரூ.500 கள்ளநோட்டுகள் 102% அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி தொழிலாளர் ஓய்வு இல்லங்களை திறந்து வைத்த அமைச்சர் சி.வி.கணேசன்!
-
தமிழ்நாட்டின் வரலாற்றில் மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத சூழல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு... குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை... மகளிர் நீதிமன்றம் அதிரடி!
-
இவ்வளவு வசதிகளா... தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்த உயர் சிறப்பு மருத்துவமனை!
-
மகளிர் தினம் : “தமிழ்நாட்டோட இலட்சிய கனவை நீங்கதான் நிறைவேற்ற போறீங்க..” - முதலமைச்சர் சொன்ன செய்தி!