India
சொந்த பேத்தியை சிகரெட் புகைக்க வற்புறுத்திய கொடூர தாத்தா: உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது சொந்த பேத்தியை சிகரெட் பிடிக்கும் படி கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் குழந்தையின் தாத்தா மற்றும் பெற்றோர் ஆகியோரை குழந்தைகள் நலக் குழு முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.
அப்போது குழந்தையின் தாய், "சிகரெட் பிடிக்கச் சொல்லி குழந்தையை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள். எனது குழந்தையை விட்டுவிடுங்கள் என்று கூறி தடுத்து நிறுத்த முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை மிரட்டினர்" என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த குற்றச்சாட்டை அடுத்து போலிஸார் குழந்தையின் தாத்தா மற்றும் மாமா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!