India
சொந்த பேத்தியை சிகரெட் புகைக்க வற்புறுத்திய கொடூர தாத்தா: உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது சொந்த பேத்தியை சிகரெட் பிடிக்கும் படி கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் குழந்தையின் தாத்தா மற்றும் பெற்றோர் ஆகியோரை குழந்தைகள் நலக் குழு முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.
அப்போது குழந்தையின் தாய், "சிகரெட் பிடிக்கச் சொல்லி குழந்தையை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள். எனது குழந்தையை விட்டுவிடுங்கள் என்று கூறி தடுத்து நிறுத்த முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை மிரட்டினர்" என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த குற்றச்சாட்டை அடுத்து போலிஸார் குழந்தையின் தாத்தா மற்றும் மாமா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!