India
சொந்த பேத்தியை சிகரெட் புகைக்க வற்புறுத்திய கொடூர தாத்தா: உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது சொந்த பேத்தியை சிகரெட் பிடிக்கும் படி கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் குழந்தையின் தாத்தா மற்றும் பெற்றோர் ஆகியோரை குழந்தைகள் நலக் குழு முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.
அப்போது குழந்தையின் தாய், "சிகரெட் பிடிக்கச் சொல்லி குழந்தையை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள். எனது குழந்தையை விட்டுவிடுங்கள் என்று கூறி தடுத்து நிறுத்த முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை மிரட்டினர்" என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த குற்றச்சாட்டை அடுத்து போலிஸார் குழந்தையின் தாத்தா மற்றும் மாமா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!