India
கேரளாவில் பரவும் West Nile வைரஸ்.. ஒருவர் பலி: புதிய தொற்றுக்கு காரணம் என்ன?
கேரளாவில் 'ஜிகா' வைரசை போன்று புதிது புதிதாக உயிரை கொள்ளும் வைரஸ்கள் அடிக்கடி பரவி மக்களைப் பீதியடைய வைத்து வருகிறது. தற்போது மீண்டும் கேரளாவில் 'வெஸ்ட் நைல்' காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.
திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது நபருக்கு இந்த வெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு மே 17ம் தேதி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அம்மாநில சுகாதாரத்துறை 'வெஸ்ட் நைல்' காய்ச்சல் பரவாமல் இருக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இந்த வைரஸ் கொசுக்களின் மூலம் பரவக் கூடியது.
இந்தியாவிலேயே முதன் முதலில் 2006ம் ஆண்டு கேரளா மாநிலம் ஆலப்புழாவில் தான் இந்த 'வெஸ்ட் நைல்' வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பிறகு 2011ம் ஆண்டு எர்ணாகுளத்திலும், 2019ம் ஆண்டு மலப்புரத்திலும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 'வெஸ்ட் நைல்' வைரஸ் முதன் முதலில் உகாண்டா நாட்டில்தான் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!