India
கேரளாவில் பரவும் West Nile வைரஸ்.. ஒருவர் பலி: புதிய தொற்றுக்கு காரணம் என்ன?
கேரளாவில் 'ஜிகா' வைரசை போன்று புதிது புதிதாக உயிரை கொள்ளும் வைரஸ்கள் அடிக்கடி பரவி மக்களைப் பீதியடைய வைத்து வருகிறது. தற்போது மீண்டும் கேரளாவில் 'வெஸ்ட் நைல்' காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.
திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது நபருக்கு இந்த வெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு மே 17ம் தேதி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அம்மாநில சுகாதாரத்துறை 'வெஸ்ட் நைல்' காய்ச்சல் பரவாமல் இருக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இந்த வைரஸ் கொசுக்களின் மூலம் பரவக் கூடியது.
இந்தியாவிலேயே முதன் முதலில் 2006ம் ஆண்டு கேரளா மாநிலம் ஆலப்புழாவில் தான் இந்த 'வெஸ்ட் நைல்' வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பிறகு 2011ம் ஆண்டு எர்ணாகுளத்திலும், 2019ம் ஆண்டு மலப்புரத்திலும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 'வெஸ்ட் நைல்' வைரஸ் முதன் முதலில் உகாண்டா நாட்டில்தான் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!