India
கேரளாவில் பரவும் West Nile வைரஸ்.. ஒருவர் பலி: புதிய தொற்றுக்கு காரணம் என்ன?
கேரளாவில் 'ஜிகா' வைரசை போன்று புதிது புதிதாக உயிரை கொள்ளும் வைரஸ்கள் அடிக்கடி பரவி மக்களைப் பீதியடைய வைத்து வருகிறது. தற்போது மீண்டும் கேரளாவில் 'வெஸ்ட் நைல்' காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.
திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது நபருக்கு இந்த வெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு மே 17ம் தேதி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அம்மாநில சுகாதாரத்துறை 'வெஸ்ட் நைல்' காய்ச்சல் பரவாமல் இருக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இந்த வைரஸ் கொசுக்களின் மூலம் பரவக் கூடியது.
இந்தியாவிலேயே முதன் முதலில் 2006ம் ஆண்டு கேரளா மாநிலம் ஆலப்புழாவில் தான் இந்த 'வெஸ்ட் நைல்' வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பிறகு 2011ம் ஆண்டு எர்ணாகுளத்திலும், 2019ம் ஆண்டு மலப்புரத்திலும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 'வெஸ்ட் நைல்' வைரஸ் முதன் முதலில் உகாண்டா நாட்டில்தான் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!