India
பசியுடன் வயலில் இறங்கிய யானை.. உண்ணும் போது சுட்டுக்கொன்ற நபர்: கர்நாடகாவில் நடந்த கொடூரம்!
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்திற்குட்பட்ட ஆலூர் கிராமத்தில் உள்ள வயலில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த யானையின் உடலை ஆய்வு செய்தனர்.
அப்போது யானையில் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இருந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்தபோது, விவசாய நிலத்திற்குள் யானை புகுந்து சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த விவசாயி சையத் சித்தார் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஒரு வருடத்தில் மட்டும் 5 யானைகள் மர்மாக உயிரிழந்துள்ளன. இந்தப் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதாக அப்பகுதிமக்கள் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் குறியும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Also Read
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
-
குதிரை பேரத்தில் ஈடுபட்ட விஜய் அரசின் மூக்கு அறுபட்டது; கிரிமினல்கள் நிரம்பிய கேபினட்: இ.பரந்தாமன் பேட்டி
-
“தறிகெட்டு அராஜகம் செய்யும் த.வெ.க.வினர்...” - பட்டியலிட்டு Part 2-வை வெளியிட்ட முரசொலி!