India
பசியுடன் வயலில் இறங்கிய யானை.. உண்ணும் போது சுட்டுக்கொன்ற நபர்: கர்நாடகாவில் நடந்த கொடூரம்!
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்திற்குட்பட்ட ஆலூர் கிராமத்தில் உள்ள வயலில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த யானையின் உடலை ஆய்வு செய்தனர்.
அப்போது யானையில் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இருந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்தபோது, விவசாய நிலத்திற்குள் யானை புகுந்து சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த விவசாயி சையத் சித்தார் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஒரு வருடத்தில் மட்டும் 5 யானைகள் மர்மாக உயிரிழந்துள்ளன. இந்தப் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதாக அப்பகுதிமக்கள் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் குறியும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Also Read
-
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச என்ன யோக்கியதை உண்டு? : பழனிசாமி ஆட்சியின் அவலங்களை நினைவூட்டிய முரசொலி!
-
“கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் மதவாதத்தை வீழ்த்தும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
“ரயில் திட்டங்களில் தமிழ்நாடு முழுமுற்றாக புறக்கணிப்பு” : சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள ஒன்றிய அரசு : மெட்ரோ முதல் நிதிப்பகிர்வு வரை பெரும் ஏமாற்றம்!