India
பசியுடன் வயலில் இறங்கிய யானை.. உண்ணும் போது சுட்டுக்கொன்ற நபர்: கர்நாடகாவில் நடந்த கொடூரம்!
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்திற்குட்பட்ட ஆலூர் கிராமத்தில் உள்ள வயலில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த யானையின் உடலை ஆய்வு செய்தனர்.
அப்போது யானையில் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இருந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்தபோது, விவசாய நிலத்திற்குள் யானை புகுந்து சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த விவசாயி சையத் சித்தார் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஒரு வருடத்தில் மட்டும் 5 யானைகள் மர்மாக உயிரிழந்துள்ளன. இந்தப் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதாக அப்பகுதிமக்கள் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் குறியும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Also Read
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!