India
”இஸ்லாமியர்களைத் துன்புறுத்துவதில் பா.ஜ.க முதல்வர்களுக்கு இடையே போட்டி”.. மெஹபூபா முஃப்தி காட்டம்!
இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான இந்துத்வ கும்பலின் தாக்குதல்கள் ஒன்றிய அரசின் பாஜக ஆட்சியமைத்த நாளில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இஸ்லாமியர்கள், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது தொடர்ந்து வந்த பா.ஜ.க மற்றும் இந்துத்வ கும்பலின் அடக்குமுறைகள், தற்போது காண்போரையெல்லாம் இஸ்லாமியர்களாக எண்ணித் தாக்குவதும் நடைபெறுகிறது.
அண்மையில் கூட மத்திய பிரதேசத்தில் இஸ்லாமியர் என நினைத்து அவரது அடையாள அட்டையைக் காட்டச் சொல்லி பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இஸ்லாமியர்களைத் துன்புறுத்துவதில் பா.ஜ.க முதல்வர்களுக்கு இடையோ போட்டி நிகழ்கின்றனர் என ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து ஹபூபா முஃப்தி செய்தியாளர்களிடம், ஆங்கிலேயர்கள் இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரச்சாரத்தைச் செய்தார்கள். தற்போது பா.ஜ.கவும் அதே பிரச்சாரத்தை செய்து வருகிறது. இஸ்லாமியர்களைத் துன்புறுத்துவதில் பா.ஜ.க முதல்வர்களுக்கு இடையோ போட்டி போடுகின்றனர்.
இதனால் தான் மசூதிகளில் கோயில்கள் இருப்பதாக வேண்டும் என்றே பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இதை பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறார். அவரது கட்சி செய்வதைச் சரி என்று நினைக்கிறார். குஜராத், உத்தர பிரதேசத்தை போலவே மற்ற மாநிலங்களிலும் ஏற்படுத்த இவர்கள் நினைக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
நேபாள வெள்ளம்.. சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும்: வெளியுறவுத்துறைக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்!
-
நேபாளத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு! : 105 இந்தியர்கள் மாயமானதால் பரபரப்பு!
-
சுற்றி கிடக்கும் மதுபாட்டில்கள்.. அரசு மருத்துவமனையில் அவலம்! - வீடியோவால் அதிர்ச்சி!
-
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விலக்கு தீர்மானம் : அரசின் உண்மை முகம் எது? - அன்பில் மகேஸ் கேள்வி!
-
கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?