India
வீட்டை திறந்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சடலமாக இருந்த தாய், 2 மகள்கள்: விசாரணையில் பகீர்!
டெல்லியில் உள்ள விஹார் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் மஞ்சு மற்றும் அவரது இரண்டு மகள்கள் அன்ஷிகா, அன்கு ஆகியோர் வசித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து இவர்கள் வீட்டின் கதவு திறக்கப்படாமலே இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அருகே வசிப்பவர்கள் இது குறித்து போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் மஞ்சுவின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மஞ்சு, அன்ஷிகா, அன்கு ஆகிய மூன்று பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்தை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு மூன்று பேரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வீடுமுழுவதும் சிலிண்டர் கியாஸ் வாயு நாற்றம் அடித்துள்ளது. தற்கொலை கடிதம் ஒன்றும் போலிஸாருக்கு கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு கொரோனாவால் மஞ்சுவின் கணவர் உயிரிழந்துள்ளார். இதனால் மஞ்சுவும், அவரது இரண்டு மகள்களும் கடும் மன அழுத்தத்திலிருந்துள்ளனர். இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!