India
காதலியுடன் பேசிய நண்பன்.. ஆத்திரத்தில் 12ம் வகுப்பு மாணவன் செய்த விபரீத செயல்: போலிஸ் ஷாக்!
தெலங்கானா மாநிலம், ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள பள்ளியில் துர்க பிரசாத் என்ற மாணவன் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவருடன் பேசிவந்துள்ளார். இதே பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் அந்த மாணவியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது தோழியுடன் துர்க பிரசாத் தொடர்ந்து பேசி வந்ததால் அந்த மாணவன் அவர் மீது கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவன், துர்க பிரசாத்தை தனியாக அழைத்துச் சென்று மாணவியுடன் பேசக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து துர்க பிரசாத்தை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
பிறகு அப்பகுதி மக்கள் துர்க பிரசாத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து 12ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியுடன் பேசிய மாணவனை, காதலன் கத்தியால் குத்திய சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!