India
காதலியுடன் பேசிய நண்பன்.. ஆத்திரத்தில் 12ம் வகுப்பு மாணவன் செய்த விபரீத செயல்: போலிஸ் ஷாக்!
தெலங்கானா மாநிலம், ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள பள்ளியில் துர்க பிரசாத் என்ற மாணவன் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவருடன் பேசிவந்துள்ளார். இதே பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் அந்த மாணவியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது தோழியுடன் துர்க பிரசாத் தொடர்ந்து பேசி வந்ததால் அந்த மாணவன் அவர் மீது கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவன், துர்க பிரசாத்தை தனியாக அழைத்துச் சென்று மாணவியுடன் பேசக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து துர்க பிரசாத்தை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
பிறகு அப்பகுதி மக்கள் துர்க பிரசாத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து 12ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியுடன் பேசிய மாணவனை, காதலன் கத்தியால் குத்திய சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!