India
பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. கேரளாவில் அடுத்தடுத்து பலியாகும் திரை பிரபலங்கள் - பகீர் சம்பவம்!
மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் கேரள மாநிலம் கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு வேலைச் செல்லும் பெண் பணியாளர் ஒருவர், வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். எந்தவொரு சத்தமும் கேட்காத நிலையில், அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது நீண்ட நேரமாக கதவு திறக்கப்பட்ட வில்லை என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில், ஷெரின் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்தபோலிஸார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷெரின் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததாக தெரிந்தது. மேலும் அவர் தனது முகநூல் பக்கத்தில் சோகமான பதிவுகளை வெளியிட்டிருந்ததையும் போலிஸார் கண்டறிந்தனர்.
மேலும் நண்பர்களிடத்தில் நடத்திய விசாரணையில், ஷெரின் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் இருவரை தீவிரமாக காதலித்ததாகவும், திருங்கை என்பதால் அவரது காதலை முறித்துக்கொண்டு இளைஞர் பிரிந்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலிஸார் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்தவாரம் கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்தவர் ஷகானா என்ற இளம் நடிகை தற்கொலை செய்துகொண்ட நிலையில், மற்றொரு இளம் நடிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இஸ்லாமியர்களின் உரிமைக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க. தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!