India
பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. கேரளாவில் அடுத்தடுத்து பலியாகும் திரை பிரபலங்கள் - பகீர் சம்பவம்!
மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் கேரள மாநிலம் கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு வேலைச் செல்லும் பெண் பணியாளர் ஒருவர், வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். எந்தவொரு சத்தமும் கேட்காத நிலையில், அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது நீண்ட நேரமாக கதவு திறக்கப்பட்ட வில்லை என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில், ஷெரின் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்தபோலிஸார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷெரின் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததாக தெரிந்தது. மேலும் அவர் தனது முகநூல் பக்கத்தில் சோகமான பதிவுகளை வெளியிட்டிருந்ததையும் போலிஸார் கண்டறிந்தனர்.
மேலும் நண்பர்களிடத்தில் நடத்திய விசாரணையில், ஷெரின் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் இருவரை தீவிரமாக காதலித்ததாகவும், திருங்கை என்பதால் அவரது காதலை முறித்துக்கொண்டு இளைஞர் பிரிந்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலிஸார் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்தவாரம் கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்தவர் ஷகானா என்ற இளம் நடிகை தற்கொலை செய்துகொண்ட நிலையில், மற்றொரு இளம் நடிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?