India
இளைஞர்களைக் காவு வாங்கும் செல்ஃபி.. தண்டவாளத்தில் நின்று மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்த மாணவி பரிதாப பலி!
கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் நபாத் பதாக். பள்ளி மாணவியான அவர் தனது ஆண் நண்பர் இசாம் என்பவருடன் சேர்ந்து பரோக் ரயில்வே பாலத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, ரயில்வே தண்டவாளத்தில் நின்று தனது செல்போனில் மகிழ்ச்சியாகத் தனது நண்பருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் அவ்வழியாக வந்த மங்கலாபுரம் - கோயம்புத்தூர் விரைவு ரயில் இருவர் மீதும் மோதியுள்ளது. இதில், பாலத்திலிருந்து மாணவி ஆற்றில் தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பருக்கு கை, கால்கள் உடைந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் ஆற்றில் விழுந்த மாணவியை மீட்டபோது அவர் உயிரிழந்தது தெரிந்தது.
இதையடுத்து அவரது உடலை போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த நிலையிலிருந்த மாணவியின் நண்பர் இசாமை மீட்ட போலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக் காலமாகவே இளைஞர்களின் செல்ஃபி மோகத்தால் பலர் உயிரிழந்து வருவது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-விற்கு ஒரு MP சீட் ஒதுக்கீடு!
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!
-
இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!