India
ஏன் அழைப்பிதல் அடிக்கவில்லை எனக்கேட்டு PWD அதிகாரியை திட்டிய பாஜக அமைச்சர்: புதுவையில் பரபரப்பு!
புதுச்சேரி வில்லியனூர் தொகுதிகுட்பட்ட வி.மணவெளி பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக அமைச்சர் சாய் சரவணக்குமார் அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கடும் கோபத்துடன் வந்த பாஜக அமைச்சர் சாய் சரவணகுமார், அங்கிருந்த பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்திய மூர்த்தியை பார்த்து, ஏன் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அடிக்கவில்லை எனவும், இனிமேல் அரசு நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே எனக்கு தகவல் தர வேண்டும். அப்போதுதான் பாஜகவினரை என்னால் விழாவிற்கு அழைத்து வர முடியும்.
அழைப்பிதழ் அடிக்கவில்லை என்றால் இனிமேல் அரசுக்கு நிகழ்ச்சிக்கு என்னை அழைக்க வேண்டாமென சராமாரியாக திட்டி எச்சரிக்கை விடுத்தார். பொதுமக்கள் மத்தியில் சராமாரியாக திட்டியதால் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்யமூர்த்தி செய்வதறியாமல் திகைத்து நின்றார்.
பொதுவாக அடிக்கல்நாட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு புதுச்சேரி அரசு சார்பில் அழைப்பிதழ் அடிப்பது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !
-
பாலியல் வழக்கு : தொடர்ந்து எழும் புகார்... கர்நாடக முன்னாள் அமைச்சர் HD ரேவண்ணா அதிரடி கைது !
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!