India
ஏன் அழைப்பிதல் அடிக்கவில்லை எனக்கேட்டு PWD அதிகாரியை திட்டிய பாஜக அமைச்சர்: புதுவையில் பரபரப்பு!
புதுச்சேரி வில்லியனூர் தொகுதிகுட்பட்ட வி.மணவெளி பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக அமைச்சர் சாய் சரவணக்குமார் அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கடும் கோபத்துடன் வந்த பாஜக அமைச்சர் சாய் சரவணகுமார், அங்கிருந்த பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்திய மூர்த்தியை பார்த்து, ஏன் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அடிக்கவில்லை எனவும், இனிமேல் அரசு நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே எனக்கு தகவல் தர வேண்டும். அப்போதுதான் பாஜகவினரை என்னால் விழாவிற்கு அழைத்து வர முடியும்.
அழைப்பிதழ் அடிக்கவில்லை என்றால் இனிமேல் அரசுக்கு நிகழ்ச்சிக்கு என்னை அழைக்க வேண்டாமென சராமாரியாக திட்டி எச்சரிக்கை விடுத்தார். பொதுமக்கள் மத்தியில் சராமாரியாக திட்டியதால் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்யமூர்த்தி செய்வதறியாமல் திகைத்து நின்றார்.
பொதுவாக அடிக்கல்நாட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு புதுச்சேரி அரசு சார்பில் அழைப்பிதழ் அடிப்பது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!