India
மது குடிக்க இப்படியொரு திட்டமா? : புதுவையில் வாகன சோதனையின் போது பிடிபட்ட போதை ஆசாமி.. நடந்தது என்ன?
புதுச்சேரி திருபுவனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவு இருசக்கர வாகனங்கள் திருடுபோனதால், திருபுவனை காவல்நிலையம் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு புதுச்சேரி - தமிழக எல்லையான மதகடிப்பட்டு பகுதியில் போலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, விழுப்புரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், வெங்கடேசன் தற்போது வேலை இல்லாமல் இருப்பதும், மது குடிப்பதற்காக திருபுவனை, வில்லியனூர், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலிசார், அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!