India
கேரள மாணவி சாப்பிட்ட ஷவர்மாவில் ஷிகெல்லா வைரஸ்?.. மாணவியின் உடற்கூறு ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு தனது பள்ளி மாணவர்கள் 18 பேருடன் சேர்ந்து பள்ளியின் அருகில் உள்ள கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர்.
பிறகு சிறிது நேரத்திலேயே ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக மயக்கம் அடைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சிகிச்சையிலிருந்த தேவநந்தா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 17 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடையில் சோதனை செய்ததில் பழைய கோழிக்கறியை பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த மாணவியின் உடற்கூறு ஆய்வில், கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவில் சேர்க்கப்பட்டுள்ளதால் அதிலிருந்த ஷகெல்லா என்ற வைரஸ் மாணவியின் இறப்புக்குக் காரணமாக இருந்துள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மாணவிகளில் மூன்று பேருக்கும் இந்த ஷகெல்லா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து அந்த மூன்று மாணவிகளும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஷிகெல்லா வைரஸ் என்பது சுகாதாரமில்லாத தண்ணீர் மற்றும் கெட்டுப்போன உணவு பொருட்களில் உற்பத்தியாகக் கூடியது. இதைச் சாப்பிடும் போது அது மனிதர்களுக்கும் பரவி அவர்களின் உயிரை பலி வாங்கிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தரமான ஷவர்மா தயாரிக்க புதிய வழிகாட்டுநெறிமுறைகளை சமர்பிக்க உணவு பாதுகாப்புத்துறைக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!