India
தலைக்கேறிய போதை; போன் கடையில் சிகரெட் கேட்டு ரகளை: விலையுயர்ந்த மொபைல் பறிப்பு; பிரபல ரவுடிகளுக்கு காப்பு
புதுச்சேரி சின்ன சுப்பராயபிள்ளை வீதியை சேரந்தவர் அர்ஜுனன் (20). இவர் புதிய பேருந்து நிலையம் அருகே செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அர்ஜுனன் கடையை மூடி கொண்டிருந்த போது, இரண்டு நபர்கள் மது போதையில் செல்போன் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர்.
அப்போது அர்ஜுனன் இது செல்போன் பழுது பார்க்கும் கடை இங்கு சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார். மதுபோதையில் தலைகால் தெரியாத அவர்கள், அர்ஜுனனின் பேச்சால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்து அர்ஜுனன் உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலிஸார் வழக்கு பதிவு செய்து பறித்து செல்லப்பட்ட செல்போன் எண்ணின் சிக்னலை ட்ராக் செய்து இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திகேயன் (30) மற்றும் அவரது கூட்டாளி அரவிந்த் குமார் (28) என்பதும், குடிபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன் மீது புதுச்சேரியில் கொலை அடிதடி உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘கலைஞர் எழுதுகோல் விருது’ பெற்ற ‘தினத்தந்தி’ நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமார்! : முழு விவரம் உள்ளே!
-
“மூன்றாம் தலைமுறை பெரியாரிஸ்ட் நான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!