India
தலைக்கேறிய போதை; போன் கடையில் சிகரெட் கேட்டு ரகளை: விலையுயர்ந்த மொபைல் பறிப்பு; பிரபல ரவுடிகளுக்கு காப்பு
புதுச்சேரி சின்ன சுப்பராயபிள்ளை வீதியை சேரந்தவர் அர்ஜுனன் (20). இவர் புதிய பேருந்து நிலையம் அருகே செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அர்ஜுனன் கடையை மூடி கொண்டிருந்த போது, இரண்டு நபர்கள் மது போதையில் செல்போன் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர்.
அப்போது அர்ஜுனன் இது செல்போன் பழுது பார்க்கும் கடை இங்கு சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார். மதுபோதையில் தலைகால் தெரியாத அவர்கள், அர்ஜுனனின் பேச்சால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்து அர்ஜுனன் உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலிஸார் வழக்கு பதிவு செய்து பறித்து செல்லப்பட்ட செல்போன் எண்ணின் சிக்னலை ட்ராக் செய்து இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திகேயன் (30) மற்றும் அவரது கூட்டாளி அரவிந்த் குமார் (28) என்பதும், குடிபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன் மீது புதுச்சேரியில் கொலை அடிதடி உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!