India
தலைக்கேறிய போதை; போன் கடையில் சிகரெட் கேட்டு ரகளை: விலையுயர்ந்த மொபைல் பறிப்பு; பிரபல ரவுடிகளுக்கு காப்பு
புதுச்சேரி சின்ன சுப்பராயபிள்ளை வீதியை சேரந்தவர் அர்ஜுனன் (20). இவர் புதிய பேருந்து நிலையம் அருகே செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அர்ஜுனன் கடையை மூடி கொண்டிருந்த போது, இரண்டு நபர்கள் மது போதையில் செல்போன் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர்.
அப்போது அர்ஜுனன் இது செல்போன் பழுது பார்க்கும் கடை இங்கு சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார். மதுபோதையில் தலைகால் தெரியாத அவர்கள், அர்ஜுனனின் பேச்சால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்து அர்ஜுனன் உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலிஸார் வழக்கு பதிவு செய்து பறித்து செல்லப்பட்ட செல்போன் எண்ணின் சிக்னலை ட்ராக் செய்து இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திகேயன் (30) மற்றும் அவரது கூட்டாளி அரவிந்த் குமார் (28) என்பதும், குடிபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன் மீது புதுச்சேரியில் கொலை அடிதடி உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!
-
”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”
-
அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!