India
ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி பரிதாப பலி.. 17 பேருக்கு சிகிச்சை : கேரளாவை உலுக்கிய பகீர் சம்பவம்!
கேரள மாநிலம் கான்ஹாகட் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடன் படிக்கும் 18 பேருடன் பள்ளியில் அருகில் உள்ள கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே ஒருவர்பின் ஒருவராக மயக்கம் அடைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்ததில் உணவில் இருந்த நச்சால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர். இதனிடையே சிகிச்சையில் இருந்த தேவநந்தா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 17 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்தபோலிஸார், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், உணவுப்பாதுகாப்பு படையினர் சோதனை செய்ததில், . பழைய கோழிக்கறியை பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து, ஷவர்மா கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!