India
வீடு புகுந்து 18 சவரன் நகையை அபேஸ் செய்த மேல்மாடி வளர்மதி.. புதுச்சேரியில் நடந்த துணிகரச் செயல்!
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி.நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி அனிதா (38). சேதராப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று அனிதா தனது 18 பவுன் நகைகளை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். பீரோ சாவியை வீட்டில் மறைவான இடத்தில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார்.
பின்னர் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நகை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
இதுகுறித்து உடனடியாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அனிதா புகார் செய்தார். அதன்பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின் பேரில் வீட்டின் மாடியில் வசித்த திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் 18 பவுன் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலிஸார் கைது செய்தனர். மேலும் நகையையும் பறிமுதல் செய்தனர்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!