India
வீடு புகுந்து 18 சவரன் நகையை அபேஸ் செய்த மேல்மாடி வளர்மதி.. புதுச்சேரியில் நடந்த துணிகரச் செயல்!
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி.நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி அனிதா (38). சேதராப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று அனிதா தனது 18 பவுன் நகைகளை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். பீரோ சாவியை வீட்டில் மறைவான இடத்தில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார்.
பின்னர் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நகை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
இதுகுறித்து உடனடியாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அனிதா புகார் செய்தார். அதன்பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின் பேரில் வீட்டின் மாடியில் வசித்த திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் 18 பவுன் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலிஸார் கைது செய்தனர். மேலும் நகையையும் பறிமுதல் செய்தனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !