India
தொழிற்சாலைகளுக்கான நிலக்கரி விநியோகத்தையும் குறைத்த ஒன்றிய பாஜக அரசு.. பிரதமருக்கு 10 கூட்டமைப்பு கடிதம்!
அனல்மின் நிலையங்களைத் தொடர்ந்து தொழிற் சாலைகளுக்குத் தேவைப்படும் நிலக்கரியும் பெருமளவுக்கு குறைப்பு. சிமெண்ட், அலுமினியம், இரும்பு தொழிற் சாலைளுக்கான நிலக்கரி தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும் என்று 10 துறைகளை சேர்ந்தவர்கள் கூட்டாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதன்படி, இந்தியாவில் செயல்படும் 150 அனல்மின் நிலையங்களில் 85 கடும் நிலக்கரி தட்டுப்பாட்டில் உள்ளன. இதே போல் மற்ற தொழிற் சாலைகளுக்கான நிலக்கரி விநியோகத்தையும் கோல் இந்தியா குறைத்துள்ளது.
இதனால் அனல்மின் நிலையங்கள் போல் மற்ற தொழிற் சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே போதுமான நிலக்கரியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று அலுமினியம், இரும்பு தாயரிப்பு உள்ளிட்ட 10 துறைகளின் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஸ்டீல் தொழிற்சாலைகளுக்கு 27% நிலக்கரியும், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு 14% நிலக்கரியும், இரும்பு தொழில்சாலைகளுக்கு 20% நிலக்கரியும், அனல்மின் நிலையங்களுக்கு 32% நிலக்கரியும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Also Read
-
Digital Store Value Pass... சென்னை மெட்ரோ ரயிலில் எளிதாக பயணிக்க இதை பயன்படுத்தலாம் : விவரம் உள்ளே !
-
வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியாவை பழிவாங்குகிறதா அமெரிக்கா ? - நாடாளுமன்றத்தில் திமுக MP ஆ.ராசா கேள்வி !
-
பஹல்காம் தாக்குதல் ஒன்றிய பாஜக அரசின் நிர்வாக தோல்வி - நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. ராசா குற்றச்சாட்டு!
-
“மோடியிடம் தைரியம் இல்லை... பாகிஸ்தானிடம் சரணடைந்து விட்டாரா?” : ராகுல் காந்தி கடும் தாக்கு!
-
“அமித்ஷாவின் பஹல்காம் கேலிக்கூத்து... மோடி எங்கே இருக்கிறார் ?” : மக்களவையில் ஆவேசமான திருச்சி சிவா MP !