India
தொழிற்சாலைகளுக்கான நிலக்கரி விநியோகத்தையும் குறைத்த ஒன்றிய பாஜக அரசு.. பிரதமருக்கு 10 கூட்டமைப்பு கடிதம்!
அனல்மின் நிலையங்களைத் தொடர்ந்து தொழிற் சாலைகளுக்குத் தேவைப்படும் நிலக்கரியும் பெருமளவுக்கு குறைப்பு. சிமெண்ட், அலுமினியம், இரும்பு தொழிற் சாலைளுக்கான நிலக்கரி தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும் என்று 10 துறைகளை சேர்ந்தவர்கள் கூட்டாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதன்படி, இந்தியாவில் செயல்படும் 150 அனல்மின் நிலையங்களில் 85 கடும் நிலக்கரி தட்டுப்பாட்டில் உள்ளன. இதே போல் மற்ற தொழிற் சாலைகளுக்கான நிலக்கரி விநியோகத்தையும் கோல் இந்தியா குறைத்துள்ளது.
இதனால் அனல்மின் நிலையங்கள் போல் மற்ற தொழிற் சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே போதுமான நிலக்கரியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று அலுமினியம், இரும்பு தாயரிப்பு உள்ளிட்ட 10 துறைகளின் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஸ்டீல் தொழிற்சாலைகளுக்கு 27% நிலக்கரியும், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு 14% நிலக்கரியும், இரும்பு தொழில்சாலைகளுக்கு 20% நிலக்கரியும், அனல்மின் நிலையங்களுக்கு 32% நிலக்கரியும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Also Read
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!
-
“மே 4ஆம் தேதி உழைப்பிற்கான பலன் கிடைக்கும்... நல்லாட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி.. சிகரத்துக்கு மகுடம்” : முரசொலி தலையங்கம்!
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து