India
மணி வாங்க வந்த குறவர்இன சிறுமியிடம் சில்மிஷம்: புதுவை பேன்சி கடை உரிமையாளரை சிறையில் அடைக்கச் செய்த தாய்!
கடைக்கு பொருட்கள் வாங்க வந்த நரிக்குறவ இனத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, பேன்சி ஸ்டோர் உரிமையாளரை போலிஸார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.
புதுச்சேரி சுப்பையா நகரை சேர்ந்தவர் சங்கர்லால் (வயது 42). இவர், புதிய பேருந்து நிலையம் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்த கடையில் நரிக்குறவ பெண்கள் ஊசி பாசி மணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக வாங்கி பேருந்து நிலையம் மற்றும் கடற்கரை சாலை பகுதியில் விற்பது வழக்கம்.
அதுபோல் கணவரை இழந்த ஒரு நரிக்குறவ பெண் தனது 12 வயது மகளுடன் சங்கர்லால் கடைக்கு சென்று ஊசி பாசி மணிகள் வாங்கி வந்தார். ஒரு முறை தனது மகளை அனுப்பி சங்கர்லால் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருமாறு கூறியதாக தெரிகிறது.
அப்போது சங்கர்லால் அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து அந்த பெண் இதுகுறித்து உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலிஸார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சங்கர்லாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!