India
“சார்.. நைட்ல தூக்கம் வரமாட்டுது” : போலிஸாரிடம் வினோத புகார் அளித்த வாலிபர் - நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரய்யா ஹிரேமட். வாலிபரான இவர் கடந்த சில நாட்களாக இரவில் தூக்கம் வராமல் தவித்து வந்துள்ளார். மேலும் இரவு நேரத்தில் உடல் வலி ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்காக பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டும் உடல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. மேலும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் தனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளார்கள் என நினைத்துள்ளார். மேலும் ஜோதிடர் ஒருவரையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் ஹிரேமட், எனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளார்கள். அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் அவரிடம் மன நல மருத்துவரைச் சென்று பாருங்கள் என அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். இரவில் தூக்கம் வரவில்லை என கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
Also Read
-
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் விவகாரம் : பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்த பாஜக - குவியும் கண்டனம்!
-
ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் சிக்கிய கண்டெய்னர்கள்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி - விவரம் என்ன ?
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !
-
ஹரியானாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் எதிர்ப்பு : துரத்தியடித்த பொதுமக்கள் !
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !