India
“சார்.. நைட்ல தூக்கம் வரமாட்டுது” : போலிஸாரிடம் வினோத புகார் அளித்த வாலிபர் - நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரய்யா ஹிரேமட். வாலிபரான இவர் கடந்த சில நாட்களாக இரவில் தூக்கம் வராமல் தவித்து வந்துள்ளார். மேலும் இரவு நேரத்தில் உடல் வலி ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்காக பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டும் உடல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. மேலும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் தனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளார்கள் என நினைத்துள்ளார். மேலும் ஜோதிடர் ஒருவரையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் ஹிரேமட், எனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளார்கள். அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் அவரிடம் மன நல மருத்துவரைச் சென்று பாருங்கள் என அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். இரவில் தூக்கம் வரவில்லை என கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!