India
கூலிங் பீர் இல்லாததால் ஆத்திரம்: மதுக்கடையில் அட்டூழியம் செய்த 3 இளைஞர்களை கம்பி எண்ணவைத்த புதுவை போலிஸ்!
புதுச்சேரியில் மதுபானக்கடை ஒன்றில் பீர் கூலிங்காக இல்லாததால், பீர் பாட்டிலை உடைத்து மிரட்டல் விடுத்த 3 இளைஞர்களை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு மது வாங்க வந்த 3 இளைஞர்கள், கடையின் ஊழியரிடம் பீர் கேட்டுள்ளார்.
அப்போது அந்த இளைஞர்கள், பீர் கூலிங்காக இல்லை என கூறி கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மேலும் பீர் பாட்டைலை உடைத்து கத்தியை காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டடி அட்டூழியம் செய்திருக்கிறார்கள்.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கடையின் ஊழியர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிசார், மதுபானக் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.
அதில், ரகளையில் ஈடுபட்டவர்கள் ஜய்யங்குட்டி பாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி மற்றும் தருமபுரி பகுதியை சார்ந்த மணிகண்டன் மற்றும் விஜய் என்பது தெரியவந்தது. பின்னர் மூவரையும் கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!