India
கூலிங் பீர் இல்லாததால் ஆத்திரம்: மதுக்கடையில் அட்டூழியம் செய்த 3 இளைஞர்களை கம்பி எண்ணவைத்த புதுவை போலிஸ்!
புதுச்சேரியில் மதுபானக்கடை ஒன்றில் பீர் கூலிங்காக இல்லாததால், பீர் பாட்டிலை உடைத்து மிரட்டல் விடுத்த 3 இளைஞர்களை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு மது வாங்க வந்த 3 இளைஞர்கள், கடையின் ஊழியரிடம் பீர் கேட்டுள்ளார்.
அப்போது அந்த இளைஞர்கள், பீர் கூலிங்காக இல்லை என கூறி கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மேலும் பீர் பாட்டைலை உடைத்து கத்தியை காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டடி அட்டூழியம் செய்திருக்கிறார்கள்.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கடையின் ஊழியர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிசார், மதுபானக் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.
அதில், ரகளையில் ஈடுபட்டவர்கள் ஜய்யங்குட்டி பாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி மற்றும் தருமபுரி பகுதியை சார்ந்த மணிகண்டன் மற்றும் விஜய் என்பது தெரியவந்தது. பின்னர் மூவரையும் கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“திமுக-வை வழக்குகளால் அழிக்க முடியாது.. எத்தனை பேரை சிறைவைக்க முடியும்” - ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!
-
FIFA 2026: மிரட்டல் ஆட்டத்தால் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்.. சொதப்பிய அர்ஜென்டினா.. எங்கு தடுமாறியது!
-
‘நாடாளுமன்றம் நோக்கிய இளைஞர்கள் பேரணி.. காவல் துறை தடியடிக்கு கண்டனம்’ : திமுக தலைமைக் கழகம்!
-
“பேசினாலே கைது என்ற த.வெ.க அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்!” : உதயநிதி ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டிற்கான ரூ.3,284 கோடி கல்வி நிதியை விடுவிக்கப்போவது எப்போது?” : தயாநிதி மாறன் எம்.பி கேள்வி!