India
அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய ஜெகன்மோகன் உத்தரவு... ஆந்திராவில் நடப்பது என்ன?
ஆந்திர மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்யுமாறு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில், 2019ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாவட்டமாக மாற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் ஜெகன்மோகன். அதன்படி, ஆந்திர மாநிலத்தில் இருக்கும் 13 மாவட்டங்களை பிரித்து புதிதாக 13 மாவட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் உருவாக்கினார். இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது.
மேலும், முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சியமைக்கும்போதே, “அமைச்சர்களாக பதவியேற்ற அனைவரும், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்படுவர். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்” என்றும் தெரிவித்திருந்தார்.
இதனால், அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் பலரும், தங்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளில் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டரை ஆண்டுகளை தாண்டிய பிறகும், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படவில்லை.
இதனால் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஆந்திர மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஜெகன்மோகன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆந்திர ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தனை முதலமைச்சர் ஜெகன் மோகன் சந்தித்து பேச உள்ளதாகவும், புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநருடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஆந்திர அரசின் புதிய அமைச்சரவை வரும் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!