India
குடிபோதை தலைக்கேறியதால் வந்த வினை.. ஏரியில் குதித்த வாலிபருக்கு நேர்ந்த துயரம்!
மகாராஷ்டிரா மாநிலம், போரிவாலி பகுதியில் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா உள்ளது. இங்கு இருக்கும் ஏரிpபகுதி அருகே உதய் பின்கர் என்பவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது போதை தலைக்கேறிய உதய் பின்கர் ஏரியில் குதித்துள்ளார்.
பின்னர் நீரில் மூழ்கிய அவர் தன்னைக் காப்பாற்றுப்படி கூச்சலிட்டுள்ளார். ஆனால் நண்பர்களும் போதையில் இருந்ததால் அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மேலும் அன்றை தினம் பூங்காவிற்கு விடுறை என்பதால் வேறு யாரும் அங்கு இல்லை.
இதனால், உதய் பின்கரை யாரும் காப்பாற்ற முடியாததால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் போலிஸார் 3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு உதய் பின்கர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!