India
குடிபோதை தலைக்கேறியதால் வந்த வினை.. ஏரியில் குதித்த வாலிபருக்கு நேர்ந்த துயரம்!
மகாராஷ்டிரா மாநிலம், போரிவாலி பகுதியில் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா உள்ளது. இங்கு இருக்கும் ஏரிpபகுதி அருகே உதய் பின்கர் என்பவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது போதை தலைக்கேறிய உதய் பின்கர் ஏரியில் குதித்துள்ளார்.
பின்னர் நீரில் மூழ்கிய அவர் தன்னைக் காப்பாற்றுப்படி கூச்சலிட்டுள்ளார். ஆனால் நண்பர்களும் போதையில் இருந்ததால் அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மேலும் அன்றை தினம் பூங்காவிற்கு விடுறை என்பதால் வேறு யாரும் அங்கு இல்லை.
இதனால், உதய் பின்கரை யாரும் காப்பாற்ற முடியாததால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் போலிஸார் 3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு உதய் பின்கர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Also Read
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!