India
குடிபோதை தலைக்கேறியதால் வந்த வினை.. ஏரியில் குதித்த வாலிபருக்கு நேர்ந்த துயரம்!
மகாராஷ்டிரா மாநிலம், போரிவாலி பகுதியில் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா உள்ளது. இங்கு இருக்கும் ஏரிpபகுதி அருகே உதய் பின்கர் என்பவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது போதை தலைக்கேறிய உதய் பின்கர் ஏரியில் குதித்துள்ளார்.
பின்னர் நீரில் மூழ்கிய அவர் தன்னைக் காப்பாற்றுப்படி கூச்சலிட்டுள்ளார். ஆனால் நண்பர்களும் போதையில் இருந்ததால் அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மேலும் அன்றை தினம் பூங்காவிற்கு விடுறை என்பதால் வேறு யாரும் அங்கு இல்லை.
இதனால், உதய் பின்கரை யாரும் காப்பாற்ற முடியாததால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் போலிஸார் 3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு உதய் பின்கர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Also Read
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!
-
அமெரிக்காவின் பிடியில் நரேந்திர மோடி? ஒப்பந்தத்தை தன்னிச்சையாக அறிவித்த அமெரிக்கா! - முழு விவரம் உள்ளே!
-
“மிக விரைவில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள்...” - எங்கெங்கே? - அமைச்சர் மா.சு. தெரிவித்தது என்ன?
-
“காலிஸ்தானாக மாறப்போகும் டெல்லி..” - தலைநகருக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பான நாடாளுமன்றம்!