India
WEDDING PHOTOSHOOT-ல் நடந்த விபரீதம்..புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்: கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!
கேரள மாநிலம், கடியங்காட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரெஜில். இவருக்கு மார்ச் 14ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து தம்பதியினர் வெட்டிங் போட்டோ ஷூட் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, நேற்று ஜானகிகாடு அருகே உள்ள குட்டியாடி ஆற்றில் போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் இருந்த பாறை மீது தம்பதியனர் ஏறி புகைப்படத்திற்காக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். இதில் ரெஜிலுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி ஒருமாதம் கூட ஆகாத நிலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!