India
டெல்லியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட இளைஞர்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். முதல் நாளான மார்ச் 31ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கான 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிலவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
பின்னர் டெல்லி முதல்வர் அரவிந் கெஜிர்வால் உடன் சேர்ந்து அரசு மாதிரி பள்ளிகளைப் பார்வையிட்டார். இதையடுத்து இன்று மாலை டெல்லி - தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கம்பீரமாக எழுந்து நிற்கும் கழக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தைத் திறந்துவைக்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக இன்று காலை டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது டெல்லி மக்கள் முதலமைச்சரின் எளிமையையும், அவரின் உடற்பயிற்சியைக் கண்டு வியந்தனர். மேலும் இளைஞர்கள் பலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
Also Read
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!