India
அமெரிக்காவில் இருந்து சோழர்கால சிலைகள் மீட்பு.. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி!
இந்தியக் கோயில்களிலிருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகளை மீட்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ஆஸ்திரேலியாவில் இந்தியக் கலைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து 13 இந்திய சிலைகளை, சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஏல் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் பழங்கால இந்தியச் சிலைகள் இருப்பதாகச் சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் வந்துள்ளது.
இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் 13 இந்திய சிலைகளை மீட்டுள்ளனர். இதில் சோழர் காலத்து நடனமாடும் சம்பந்தர் சிலையும் ஒன்று. இந்த சிலைகள் அனைத்தும் சுபாஷ் கபூர் என்ற கடத்தல் காரரிடமிருந்து வாங்கப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சிலைகளை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையைச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!