India
வகுப்பறையிலேயே குடிபோதையில் தூங்கி வழியும் ஆசிரியர்.. 6 மாதமாக தொடரும் அவலம்! #Viral
தெலங்கானாவில் அரசுப் பள்ளியில் குடிபோதையில் ஆசிரியர் தூங்கிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சசிகாந்த் என்ற ஆசிரியர் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
ஆசிரியர் சசிகாந்த் பணிக்கு வந்த நாள் முதல் தினமும் குடித்துவிட்டு போதையில் வகுப்பறையில் உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளிக்கு சென்ற இளைஞர் ஒருவர் போதையில் தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியரை தட்டி எழுப்புவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர் மதுபோதையில் வகுப்பறையில் உறங்கும் காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் பள்ளிக்கு வரும் சசிகாந்தை பணி நீக்கம் செய்துவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!