India
வகுப்பறையிலேயே குடிபோதையில் தூங்கி வழியும் ஆசிரியர்.. 6 மாதமாக தொடரும் அவலம்! #Viral
தெலங்கானாவில் அரசுப் பள்ளியில் குடிபோதையில் ஆசிரியர் தூங்கிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சசிகாந்த் என்ற ஆசிரியர் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
ஆசிரியர் சசிகாந்த் பணிக்கு வந்த நாள் முதல் தினமும் குடித்துவிட்டு போதையில் வகுப்பறையில் உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளிக்கு சென்ற இளைஞர் ஒருவர் போதையில் தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியரை தட்டி எழுப்புவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர் மதுபோதையில் வகுப்பறையில் உறங்கும் காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் பள்ளிக்கு வரும் சசிகாந்தை பணி நீக்கம் செய்துவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!