India
தோழியை கொலை செய்து உடலை பிளாஸ்டிக் பையில் கட்டி வீசிய பெண் - ‘பகீர்’ சம்பவம் : பின்னணி என்ன?
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்தவர் தீபா ஜூகல் தாஸ். பள்ளி பேருந்து ஓட்டுநரான இவரை கடந்த சனிக்கிழமையில் இருந்து காணவில்லை. இதனால் அவரது உறவினர்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது உப்பல்வடி பகுதியில் பிளாஸ்டிக் பையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. பிறகு அங்கு சென்ற போலிஸார் அந்த உடலை மீட்டு விசாரணை செய்தபோது அது மாயமான தீபா ஜூகல் தாஸ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் இவரை யார் கொலை செய்தது என்பது குறித்து விசாரணை செய்தபோது தீபா கடைசியாகத் தனது தோழி சுவர்ணா என்பவரைப் பார்த்துள்ளார் என்பது தெரியவந்தது. பிறகு போலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
தீபா தனது தோழி சுவர்ணாவிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதை நீண்ட நாட்களாக தீபா திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் தோழிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், தீபா சம்பவத்தன்று தோழியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது கடன் கொடுத்தது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுவர்ணா தனது தோழியான தீபாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர் தனது கணவர் சாமி சோனியின் உதவியுடன் தீபாவின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து உப்பல்வடி பகுதியில் உள்ள புதரில் வீசிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து தம்பதியர் இருவரையும் போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
முதலில் எய்ம்ஸ், இப்பொது சென்னை மெட்ரோ : தமிழ்நாட்டுக்கு மட்டும் நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசு !
-
பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் : ஐ.நா-வில் நிறைவேறிய தீர்மானம் !
-
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்பர்பூர் பெயர் மாற்றப்படும் : யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தால் அதிர்ச்சி!
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்த சாய் சுதர்சன் : IPL தொடரில் எழுச்சி பெற்ற தமிழ்நாடு வீரர் !
-
ஆயுதத்தால் கொடூரமாக தாக்கப்பட்ட பாஜக நிர்வாகி : திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் அதிரடி கைது !